Ashtadik Balagargal (அஷ்டதிக் பாலகர்கள்)

உலகெங்கிலும் காண முடியாத அஷ்டதிக் பாலகர்கள் உருவ சிலா பிரதிஷ்டையுடன் கூடிய சன்னிதியை ஸ்ரீ விஜய சித்ராம்பா சமேத ஸ்ரீ ஸ்வர்ணாகர்ஷன பைரவர் ஆலய தீர்த்தத்தில் தரிசித்திடலாம். இந்திரன்,அக்னி,யமன்,நிருதி,வருணன்,வாயு,குபேரன்,ஈசான்யன் ஆகிய எட்டு தேவமூர்த்தியும் எட்டு திக்கில் பூமியை தாங்கி ஆட்சி செய்கின்றனர்.

Sri Vijaya Chitramba Sametha Sri Swarnakarshana Bhairava ​​Temple’s Theertham is a place where you can see some of the Ashtadik bridges that are not seen anywhere in the world. Indra, Agni, Yaman, Niruti, Varuna, Vayu, Kuberan, and Isanyan are the eight deities who rule the earth in eight directions.

திசைகள் அஷ்டதிக் பாலகர்களின் ஆட்சியின் கீழ்

இவர்களின் ஆட்சியின் கீழ் உள்ளதாலையே கிழக்கு திக்கை இந்திர திக்கு அல்லது இந்திர மூலை,அக்னி மூலை,ஈசான்ய மூலை என்று அழைக்கிறோம்.

அஷ்டதிக் பாலர்களின் வழிபாட்டு பலன்கள்

அஷ்டதிக் வழிபாடு என்பது உத்தம வாஸ்து வழிபாடு. இந்த திக்பாலர்கள் முன்பு தீபம் ஏற்றி, அந்த திக்பாலகர் முன்பு அவருக்குரிதான காயத்ரி மந்திரத்தை ஜெபித்தால் திக்பாலகர்கள் அனுக்கிரஹத்தால் வீடு, நிலம், மாளிகைகள் வாங்கும் பாக்கியம் கிட்டும். வீடு, மாளிகை, தொழிற்சாலை உள்ளவர்கள் வழிபட்டால் வாஸ்து சக்தி பெருகி வீட்டில்,தொழிற்சாலையில் உள்ள வாஸ்து தோஷங்கள் நீங்கி மேலும் உயர வழி பிறக்கும்.

அஷ்டதிக் பாலகர்களின் காயத்ரி மந்திரங்கள்

இந்திர காயத்ரி மந்திரம்

ஓம் சஹஸ்ர நேத்ராய வித்மஹே வஜ்ர ஹஸ்தாய தீமஹி தன்னோ இந்திர ப்ரசோதயாத்.

வருண காயத்ரி மந்திரம்

ஓம் ஜல பிம்பாய வித்மஹே நிலப்புருஷாய தீமஹி தன்னோ வருண ப்ரசோதயாத்.

அக்னி காயத்ரி மந்திரம்

ஓம் மஹா ஜவாலாய வித்மஹே அக்னி தேவாய தீமஹி தன்னோ அக்னி ப்ரசோதயாத்.

வாயு காயத்ரி மந்திரம்

ஓம் தத்புருஷாய வித்மஹே ரகசிய சஞ்சாரய தீமஹி தன்னோ வாயு ப்ரசோதயாத்.

யம காயத்ரி மந்திரம்

ஓம் சூர்ய புத்ராய வித்மஹே மஹாகாளயே தீமஹி தன்னோ யம ப்ரசோதயாத்.

குபேர காயத்ரி மந்திரம்

ஓம் யக்க்ஷராஜாய வித்மஹே வைஸ்ரவணாய தீமஹி தன்னோ குபேர ப்ரசோதயாத்.

நிருதி காயத்ரி மந்திரம்

ஓம் நிசாசராய வித்மஹே கட்க ஹஸ்தாய தீமஹி தன்னோ நிருதி ப்ரசோதயாத்

ஈசான்ய காயத்ரி மந்திரம்

ஓம் தத்புருஷாய வித்மஹே சிவ ரூபாய தீமஹி தன்னோ ரூத்ர ப்ரசோதயாத்.

குறிப்பு

  • இந்த வாஸ்து சாஸ்திரம் என்பது வீட்டிற்கு மட்டுமல்ல, நாட்டிற்கும் உள்ளது. இதை நாட்டிற்கு பார்க்கும்போது இதுவே பூம்ய ஜாதகம் என்று சொல்லவேண்டும். இதற்கே மாமன்னர்கள் முக்கியத்துவம் அளித்தார்கள்.அதன் காரணமாகவே சிறப்பான ஆட்சியும், மக்களும் செழிப்பாக வாழ்ந்தார்கள். உலகம் போற்றத்தக்க வகையில் மன்னர்களுக்கு பேரும்,புகழும் கிட்டியது.
  • வல்வினை சூழ்ந்து படுத்திருக்கும் நாட்டை நிமிர்த்த வேண்டுமென்றால் இந்த பூம்ய ஜாதகத்தை பார்க்க வேண்டும். முதலில் தமிழ்நாட்டை கணக்கிட்டு ஈசான்யத்தில் ஏரி, குளம் வெட்ட வேண்டும். பிறகு மின் உற்பத்தியை அக்னி மூலைக்கு மாற்ற வேண்டும்.
  • தெற்கு திக்கில் அறக்கடவுளான பைரவ மூர்த்தி, விக்னகாதினி தேவியை பிரதிஷ்டை செய்ய வேண்டும். இன்னும் பல ரகசியங்கள் உள்ளன. இதுவே தெய்வீகத்தின் விஞ்ஞானம். 200 ஆண்டுகள் கழித்து ஒருநாடு தலைதூக்கும் என்றால் மேலேசொன்னதை பின்பற்றினால் 50ஆண்டுகளில் நாடு தலைநிமி்ர்ந்து நிர்க்கும்.

Follow us on

Swarnakarshana bairavar
Scroll to Top
Scroll to Top